It gets curiouser and curiouser!

Monday 17 December 2012

எங்கே நிம்மதி?

எங்கே நிம்மதி?

மனதில் நிம்மதியின்றி
மனநிலை சரியுமின்றி
மயக்கத்தில் வாடியவொருவன்
மனமுருகி இறைவனிடம்தம்
மந்தநிலையை போக்க
மனத்திலே நிம்மதிவார்க்க
மன்றாடிக் கொண்டான்

கடவுள் அவனுக்கு
மூன்று வாய்ப்புகள் அளித்தார்

முதல் முறை வேண்டினான்

கடவுள் அவனைத்தம்
கடமைகள் முழுதையும்
கணக்காய் முடித்துஅவன்
கடனினை அடைக்கச்சொன்னார்

அவனும் செய்தான்
ஆனாலும் நிம்மதியில்லை

இரண்டாம் முறை வேண்டினான்

இறைவன் அவன்
இதயத்தில் ஆசைகளே
இல்லாதவாறு அடக்கச்சொன்னார்
அவனும் செய்தான்

மனத்தில் ஆசைகள்  இல்லாததால்
மனமும் மந்தமாய் மாறியது
மனதே காலியாய் கிடந்தபின்னர்
மதியும் தானே வெளிவந்தது

மனமே இல்லாமல் போனால்
மனதில் நிம்மதி எப்படி நிலவும்?

மூன்றாம் முறை அவன்
இறைவனை அழைக்கவில்லை
ஏனென்றால்

கடமைகளும் கனவுகளும்
கழிந்த பின்னர்
கதியில்லா இப்புலனும்மனமும்
காலத்தோடு கலந்துவிடுகிறது

இந்நிலையையும் கடந்து சென்றதனால்
இறைவன் அவனேயென்று உணர்ந்தான்
                       


தானே கடவுள் என்றுணர்ந்தபின்
தாழ்வும் உயர்வும் இனியுண்டோ?!
                       


3 comments:

  1. OMG !
    This guy is great ! Bharatiyar v2.0 :P

    ReplyDelete
  2. hey u r really rocking man...!! keep going..!! u hav a bright future... :) :)

    ReplyDelete

Text Widget

Copyright © The Curious Cat | Powered by Blogger

Design by Anders Noren | Blogger Theme by NewBloggerThemes.com